திருமந்திரம் - உபதேசம்
திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம்
"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்ப றுத்தானே"
விளக்கம்; இறைவன் தான் இருக்கும் சுத்தத்துரிய நிலையான விந்து நாத இடத்திலிருந்து,ஆன்மாக்களின் நல்வினை,தீவினைக்கு ஏற்ற (பிறப்பை) உடம்பை கொடுத்து, அவர்களின் கீழான நிலையை மாற்றி குளிர்ச்சியையும்,சுத்த நிலையினையும் தரக்கூடிய தன்னுடைய திருத்தாளை, திருவடியை முதன்மையான, முதல் காவலாக வைத்து கீழ் உணர்வை உள்நின்று உருக்கி மேல் உணர்வாக்கி, ஒப்பிலா ஆனந்தத்தை மூன்றாவது கண்ணில் காட்டி, ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கி அருளினான் .
மின்னல் இடியுடன் பெய்யும் தூய்மையான மழைநீர் பூமியையடையும் போது அந்த மண்ணின் நிலையை அடைகிறது. செம்மண், களிமண், கரிசல்மண் போன்ற மண்ணின் தன்மையை அடைகிறது.பின் தாவரங்களில் சார்கிறது.பின் தாவரங்களை உண்ணும் உயிரினங்களை அடைகிறது. உயிரினங்களில் சுக்கில,சுரோணிதங்களாக உருவாகிறது.அவைகள் பிறப்பை கால வித்தியாசத்தில் உருவாக்குகின்றன.
வினைக்கேற்றவாறு பிறப்பு எடுக்கும் முறைமை விளக்கியவாறு.
திருவடியாவது சுவாசமாகும்.சுவாசத்தை சரியாக வாசிக்கிறவன் சிவமாகிறான். சிவம் என்பது பரம். அதாவது இயற்கை.
ஒம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
மகான் ஸ்ரீசுப்ரமணியர் அவதார தினமான 20/08/2017 அன்று ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பில் அன்னதானம் அம்பத்தூரில் நடைபெற்றது.