ஜோதி வழிபாடு
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.- திருமந்திரம்
விளக்கம்:
பரம்பொருளின் திருவடியை பற்றிக்கொண்டே ஆத்மாவானது, அவருடைய திருமேனியை நினைத்துக் கொண்டிருப்பதும், அவருடைய நாமத்தை உண்மையாக உச்சரித்துக் கொண்டிருப்பதுமே, பரம்பொருளின் கிடைத்தற் கரிய பொன்னான அனுபவஅறிவை தம் புந்திக்குள் நிற்க வைக்கும்.
தெளிவுரை:
சூரியக்கலை சந்திரக்கலை என்பது சிவத்தின் திருத்தாள்களாகும். சூரியக்கலை சந்திரக்கலையில் ஒடுங்குவதே நந்தியின் திருத்தாளைச் சந்திப்பதாகும். நந்தியின் திருத்தாளைச் சந்திப்பதால் சிவமாகி, தாமே எங்குமாகி நிறைந்திருப்பதை உணர்வதே, நந்தி செய்ய திருமேனியாகும்.
ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் பரம் பொருளின் நாமத்தை, பெருமைகளைச் சொல்லும்போது அவன் பெறுதற்குரிய பொன்னான அனுபவஞானத்தை தம் புந்தியின் மூலம் அடைகிறான்.
திருவடி ஞானமே சிவத்திடம் கொண்டு சேர்க்கும். திருத்தாள் இரண்டும் சந்திப்பதற்கு அவனுடைய அருள் வேண்டும். “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்ற“திருவாசகத்தை”புரிந்து கொண்டால் திருவடியாகிய முறையான சுவாசப்பயிற்சியை குருவின் உபதேசத்தால் கேட்டு உணர்ந்து, செயல்படும்போது அனுபவஞானம் கைகூடுகிறது.
திருத்தாளினைச் சந்திப்பதால் போதம் நிற்குமாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
01-01-2020 அன்று 'உலக அமைதி' வேண்டி அம்பத்தூரில் "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக ஜோதி வழிபாடும், அதன்பொருட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.