top of page

மஹான் தன்வந்திரி


திருவடி யேசிவ மாவது தேரில்

திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்

திருவடி யேசெல் கதியது செப்பில்

திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

- திருமந்திரம்

விளக்கம்:

தேரும்போது சிவமாவதும், தேர்ந்து சிந்திக்கும் போது சிவலோகமாவதும், சொல்வதற்கு செல்கதியாக இருப்பதும், உள்தெளிந்து தஞ்சம் அடைவதும் திருவடி மட்டுமே ஆகும்.

தெளிவுரை:

ஒரு சீடன், குருவின் அருளாசியினால் முறையான சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதில் தேர்ந்து சிவமாம் தன்மையை அடைவார்கள். சிவமாவதால் சிவலோகத்தில் சேர்ந்திருப்பார்கள். நாம் சொல்லும் உயர்வான நிலையான கதிமோட்சத்தையும் கொடுக்கும். எப்படியாகிலும், நாம் உள்தெளிந்து தஞ்சம் அடையக்கூடியது திருவடியே ஆகும்.


குருமுகமாக உணர்ந்து, சுவாசப்பயிற்சியை தினமும் நாம் மேற்கொண்டால் பரம்பொருளின் திருவடியை தொட்டு தரிசிப்பதாகும்.


இந்தத் திருவடியை பற்றிக் கொள்வதால் சிவமாவதும், சிவலோகத்தை அடைவதும், மேலான மோட்சகதியையும் கொடுக்கும்.


திருவடியின் பெருமையை விளக்கியவாறு.

ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாயநம.

21-10-2019 அன்று 'மஹான் தன்வந்திரி' அவதார தினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் அம்பத்தூரில் நடைபெற்றது.




Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page