top of page

சட்டை நாதர்

  • பழநி கந்தசாமி
  • Aug 22, 2019
  • 1 min read

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெண்மையால்

உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு

அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்

செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.-திருமந்திரம்

விளக்கம்:

கடலில் உள்ள உவப்பு நீரானது சூரியனின் வெப்பத்தால் உவர்ப்பில் உள்ள நீர் ஆவியாகி உப்பு தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. அந்த உப்பை நீரினில் கலக்கும் போது ஒன்றாகி கலந்து விடுவது போல, சீவன் சிவத்துள் அடங்கிவிடும்.


தெளிவுரை:

உவர்ப்பு மிகுந்த கடல் நீரை உப்பளம் கட்டி சூரியனின் வெப்பத்தால் காய்ச்சும்போது நீரானது ஆவியாகி உப்பானது தனியாக கிடைக்கிறது. அதே உப்பை நீரில் கலக்கும்போது, கரைந்து ஒன்றாகி கலந்து விடுகிறது.


அதேபோல் வினைகளினால் பிறப்பெடுத்த சீவன் வினைகள் முடிந்ததும் சிவத்துள் கலந்து அடங்கிவிடும். இங்கு உப்பு எவ்வாறு நீரில் கரைந்து கலந்து ஒன்றாகிறது என்பது மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.


உப்பளத்தில் சூரியனின் உக்கிரமான வெப்பத்தால் உவர்ப்பு நீரிலிருந்து உப்பு பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வளவு கடினமாக உப்பை பிரித்தெடுத்த போதிலும், நீரினில் சேர்க்கும்போது எளிதாக கரைந்து தன் தன்மையை இழந்து நீரினில் கலந்து ஒன்றாகிறது.


அதேபோல் சீவனானது சிவத்துள் கலக்கும்போது சீவபோதம் கெட்டு சிவத்துள் அடங்குகிறது.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம



20/08/2019 அன்று 'மஹான் சட்டை நாதர்' முனிவரின் அவதார திருநாளை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் அம்பத்தூரில் வழங்கப்பட்டது.


 
 
 

Comments


Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon

SRI KARUVUR SIDTHAR PEETAM© 2017 . All rights reserved.

bottom of page