top of page

திருமந்திரம் - உபதேசம்

  • பழநி கந்தசாமி
  • Sep 27, 2017
  • 1 min read

" களிம்ப றுத்தான் எங்கள் கண்ணுதல்நந்தி

களிம்ப றுத்தான் அருட்கண் விழிப்பித்துக்

களிம்ப ணுகாத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே".

இறைவனே குருவாகி வந்து அருளுவார்.அந்த குருவானவர் அருட்கண்ணை உடையவனாக இருப்பார். அருட்கண்ணாவது நெற்றிக்கண்ணாகும். அதாவது சுழிமுனை திறப்பாகும்.சுழிமுனை திறந்தால்தான் குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும். இவ்வாறு அருட்கண் உடைய குருவானவர் பக்குவத்திற்கு ஏற்ற ஆன்மாவின் அருட்கண்ணை திறப்பார். அது எவ்வாறு எனின், சூரிய மண்டலத்தை சந்திர மண்டலத்தில் பதித்து அருட்ஜோதியை காட்டி, மும்மலக்குற்றங்கள் எப்பொழுதும் அணுகாதவாறு நீக்கியருளுவார்.


சுவாசத்தை வாசிக்க குருவின் மூலம் பயிற்சி எடுக்க வேண்டும்.சுழிமுனை திறக்கும் வரை மும்மலக்குற்றம் நீங்காது.குருவானவர் சூரிய மண்டலத்தை சந்திர மண்டலத்தில் ஒடுங்கச்செய்யும் போது,சுழிமுனை திறக்கும். அருட்ஜோதி விளங்கும். சுழிமுனை குருவருளால் திறக்கும் போது மும்மலங்களும் நீங்கிவிடும்.இதுவே சிவம் முப்புரம் எரித்ததுவாகும்.

ஆன்மாவின் பக்குவத்திற்கேற்ப விழிப்புணர்வு ஏற்படுவது விளக்கியவாறு

ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

மஹான் "புலிப்பாணி சித்தர்" அவதாரதினமான 23/09/2017 அன்று "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்டது.

 
 
 

Comments


Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon

SRI KARUVUR SIDTHAR PEETAM© 2017 . All rights reserved.

bottom of page