திருமந்திரம்-உபதேசம்
"வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே."
மூங்கிலிருந்து ‘’தீ’’ அவைகள் ஒன்றொடோன்று உரசும்போது வெளிப்படுவது போல், இந்த உடம்பினுள் கோயிலாக குடிகொண்டிருக்கும் ஆன்மாக்களின் தலைவனான இறைவன், மும்மலங்களை மாற்றித் தாயைவிடவும், கருணையெனும் கடலிருந்து சூரியனாக எழுகிறான்.
மூங்கிலினுள் தீ கனல் இருப்பதனால் அவைகள் காற்றினால் ஒன்றொடோன்று உரசும்போது தீப்பற்றிக்கொள்கிறது.அதுபோல் இந்த உடம்பெனும் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆன்மாக்களின் தலைவனான இறைவன், பிராண காற்றினால் மூலக்கனலை தூண்டும்போது மும்மலங்களை மாற்றி, கடலிலிருந்து எழும் சூரியன் போல் தனிப்பெருங்கருணையின் மூலம் மேல் எழுந்து ஒளிவெள்ளமாய்த் திகழ்கிறான்.
அன்னையானவள் தன் பிள்ளைகளிடம் புறவழுக்குகளை நீக்குவதில் மிகுந்த தயவுடையவளாய் இருப்பதால், ‘’தாயாக’’ பேர் பெற்று கொண்டாடப்படுகிறாள். அப்பேர்ப்பட்ட தாயைவிடவும் தயாநிதியாக இருந்து,உடம்பெனும் கோயிலில் குடிகொண்டு ஆன்மாக்களின் அகஅழுக்கான மும்மலக்குற்றத்தையும் மாற்றி தனிப்பெருங்கருணையினால் அருட்பெரும் ஜோதியாக வெளிப்படுகின்றான்.
இறைவனின் தனிப்பெருங்கருணை வெளிப்படுதல் விளக்கியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
03/12/2017 மற்றும் 07/12/2017 ல் மஹான் கோரக்கர் மற்றும் மஹாவதார் பாபாஜி அவர்களின் அவதார தினங்களை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக 09/12/2017 ல் அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது,