ஸ்ரீ கருவூரார் - குரு பூஜை
திருமந்திரம் - உபதேசம்
ஆமேவு பால்நீர் பிறிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
பரம்பொருளானது பொதுமன்றில் அதாவது சிற்சபையில் ஆடும் நிருத்தமானது, பசுவின் பாலில் பாலையும், நீரையும் பிரிக்கின்ற அன்னம் போலாகும்.இக்கூத்தை ஆத்மா கண்டால், தீமைகளுக்குக் காரணமான பல செயல்களுட்பட்டு வருவனவாகிய ஏழுபிறப்பும் தீயிற்பட்டு வறுக்கப்பட்ட விதைபோலாகும்.
பசுவின் பாலில் உள்ள பாலையும் நீரையும் அன்னம் எனும் பறவை தனித்தனியாக பிரித்து விடும்.
அதுபோல் பரம்பொருளின் நிருத்தக்காட்சியானது, ஆன்மாவானது தீமை பொருந்திய பல செயல்களுட்பட்டு விளையும் ஏழ்பிறப்பையும் தீயில் வறுக்கப்பட்ட விதைபோல் மாற்றிவிடும்.
தீயில் வறுக்கப்பட்ட விதையானது முளைக்காது.
பிறவியறுத்தலுக்கு, பரம்பொருளின் நிருத்தக்காட்சியே உபாயமென்று உணர்த்தப்பட்டது.
ஓம் ஸ்ரீ கருவூர் தேவாய நம
28/04/2018 அன்று குருதேவர், மஹாபுருஷர், சித்தர் "ஸ்ரீ கருவூரார்" அவர்களின் அவதார புண்ணிய தினத்தை முன்னிட்டு, "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.