top of page

திருமந்திரம் - உபதேசம்


.வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்

சுத்தத் துரியம் பிறந்து துடக்கற

ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு

செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

வினைகளினால் பிறப்புக்கு கொண்டு செல்லும் செயல்களை கெடுத்து,ஏகாந்தத்தில் சுத்தத் துரியம் பிறந்து செயல்பாடற்று சிவயோகியர்கள் புலனும் உயிரும் கலந்து உடம்போடு இறந்தவர் போல் இருப்பார்கள்.


முன் மந்திரத்தில் கூறியிருக்கிறபடி, சிவயோகியர்கள் பிறப்புக்கு காரணமான வினைகளை உருவாகாமல் கெடுக்கச்செய்து, மூலாதாரத்திலிருக்கும் அசுத்தமாய் இருக்கும் துரியத்தை ஆக்னையில் சுத்தத் துரியமாய் மலரச்செய்வார்கள்.


அவ்வாறு மலரும் போது புலன்கள் அமைதியடைந்து உயிருடன் ஒன்றாய் சேர்ந்து, உயிரில்லாத உடம்பை போல் சிவயோகியர்கள் நிர்ச்சலனமாய் இருப்பார்கள்.


புலன்கள் சிவயோகியரிடத்தில் செயல்படாத தன்மையை கூறியவாறு.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.


28/05/2018 அன்று ஞானகுரு நந்தீசர் பெருமான் அவதாரதினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக சென்னை அம்பத்தூரில் அன்னதானம் நடைபெற்றது.




















Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page