மஹான் பாபாஜி & கோரக்கர்
இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.
விளக்கம்:
சித்தர்கள் சிவமாய் அமர்ந்திருக்கும் போது எங்கும் தாமாகி இருந்து, சிவன் செயலனைத்தையும் கண்டுணர்ந்து மூன்று காலங்களின் இயல்பை அறிந்து திரிகால ஞானிகளாய் செயல்பாடற்ற நிலையில் உணர்வுடன் இருந்தார்கள் என்றவாறு.
தெளிவுரை:
சிவயோகியர் சிவமாகும் போது தன்னிலை மாறி, எல்லாவற்றிலும் எங்கும் தாமே நிற்பதாய் உணர்வார்கள். அங்கனம் இருக்கும் காலத்தில் சி(சீ)வனின் செயல்களை நோக்கும்போது, மூன்று காலங்களிலும் அதன் இயல்பானது, செயல்பாடற்ற நிலையில் சிவத்துடன் சார்ந்திருக்கிறோம் என்பதனையும் அற்று, ஆனந்தநிலையில் இருப்பார்கள்.
சிவசித்தர்கள் சிவமாகி கலந்திருக்கும்போது சீவ போதம் கெட்டுவிடுகிறது. சிவத்திற்கான செயல் எதுவும் கிடையாது. அதனால் செயல்பாடற்ற நிலையில் ஆத்மாவானது சோம்பல் தன்மையை அடைகிறது.
சீவன் சிவமாகும்போது சீவனுடைய செயல்கள் செயல்பாடு அற்று,
சோம்பலாகும் தன்மையை உணர்த்தியவாறு.
ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.
28/11/2018 அன்று "மஹான் பாபாஜி மற்றும் கோரக்கர்" அவர்களின் அவதார தினத்தை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அன்னதானம் அம்பத்தூரில் வழங்கப்பட்டது.