top of page

வள்ளலார்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே

தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே

தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே

தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

விளக்கம்;

சிவயோகியர் அறிதுயில் கொண்டு தம்முள்ளே காணுகின்ற சிவலோகத்தையும், சிவயோகத்தையும், சிவ போகத்தையும் எங்கனம் சொல்லுவது, அந்த உணர்வை அனுபவித்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளமுடியும் என்று திருமூலர் கூறுகிறார்.


தெளிவுரை:

சிவயோகியர் செயல்பாடற்ற நிலையில் தம்முள்ளே சிவத்தை அடையும் நிலையே சிவலோகமாகும். அங்கனம் சிவத்தை அடைந்து, அதனுடன் கலப்பதே சிவயோகமாகும். சிவத்துடன் கலந்து அடையும் பேரானந்தமே சிவபோக மாகும்.


ஆத்மாவானது பொன்னம்பலத்தில் திருக்கூத்துக் காணும்போது ஐம்புலன்களும் பரம்பொருளில் ஒன்றி, தான் செயல்பாடு இழந்து சோம்பலாகி, ஏகாந்தத்திலே தம்முள்ளே சிவலோகத்தையும், சிவயோகத்தையும், சிவபோகத்தையும் அனுபவிக்கின்றனர். இது அனுபவித்தே உணர முடியும். ஆதலால் இதை வெளியில் உரைப்பது எவ்வாறு என்கிறார் திருமூலர் பெருமான்.


இந்த சிவலோகத்தையும் சிவயோகத்தையும் சிவ போகத்தையும் சிவயோகியர் தம்முள்ளே, அறிதுயிலில் காண்பதை எங்கனம் வெளியில் சொல்வது என்றவாறு.


ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம.


21/01/2019 அன்று தைப்பூசம் மற்றும் இராமலிங்க சுவாமிகள் "அருட்பெருஞ்சோதியான" தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.




Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page