top of page

இராமதேவர்


எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை

அவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்

ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்

செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.

விளக்கம்:

செவ்வானின் சிவப்பை விட செழுஞ்சுடர் மாணிக்கம், எந்த மன்றத்திற்கும் ஒப்பிலாத பொதுமன்றமான சிற்சபையில் உமை காண ஆடிடும் ஆதிபரனானவன், சிவயோகியர் தன் அறிவுக்கான எல்லைவரை எவ்வாறு தன்னை (பரமனை) காண முயற்சிக்கிறார்களோ, அவ்வாறே அருட்செய்கிறான்.


தெளிவுரை:

மாலையில் சூரியன் மறையும் போது கீழ்வானம் சிவந்து காணப்படும். அந்த சிவப்பை விடவும் செழுஞ்சுடர் மாணிக்கம் போன்றவன், எத்தகையதற்கும் ஒப்பிலா பொதுமன்றமான சிற்சபையில் உமை காண ஆடிடும் ஆதிபரன், சிவயோகியர் தன் அறிவு சொல்கின்ற முடிவு எந்த எல்லைவரை சென்று தன்னை (பரமன்) காண முயற்சிக்கிறார்களோ, அவ்வாறே அருள் புரிகிறான்.



பரிபாகமுற்ற ஆத்மாக்களுக்கு முதலில் கருணை செய்பவள் சிற்சபையில் வீற்றிருக்கும் வாமி சிவகாமி தாயே ஆவாள். அதனால்தான் உமை காண ஆடிடும் ஆதிபரன் என்றார்.


சிவயோகத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவீடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அவர்களின் பக்குவத்திற்கேற்பவே அமையும். இதைத்தான் சிவயோகியர்களின் அறிவுக்கேற்ற எல்லையாக திருமூலர் கூறுகிறார்.


பரம்பொருளின் அருட்செய்யும் தன்மையை கூறியவாறு.


ஓம் ஸ்ரீகருவூரார் தேவாய நம


23/02/2019 அன்று மஹான்கள் இராமதேவர் & அறிவானந்தர் ஆகியோர்களின் அவதார தினங்களை முன்னிட்டு ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.






Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page