top of page

மகான் காகபுஜண்டர்


மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்

மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தை

பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. - திருமந்திரம்

விளக்கம்:

மாணிக்க சிவப்புக்குள் மரகத பச்சை நிற சோதி யாகவும், மரகத மாடமாகவும், பொன்னம்பலத்தில் எழுந் தருளி, நடனம் ஆடுகின்ற சிவசக்தியின் திருக்கூத்தை, சிவயோகியர் தன் மனதாலும், உடம்பாலும் வணங்கி, காணும் எத்தகைய பேற்றை பெற்றாரே.


தெளிவுரை:

இங்கே மாணிக்கமாவது சிவமாகும், மரகதமாவது சக்தியாகும். சிவத்துள் சக்தி ஒடுங்கியிருக்கும் நிலையானது மாணிக்கத்துள்ளே மரகதச்சோதியாகும். சிவத்திலிருந்து சக்தி தனித்திருக்கும் நிலையே, மாணிக்கத்துள்ளே மரகத மாடமாம். சுத்த பொன்னம்பலத்தில் சிவமும், சிவகாமியும் நடனம் ஆடுகின்ற திருக்கூத்தை, சிவயோகியர் தன் மனதாலும், உடம்பாலும் தொழுதேற்றி காணும் எத்தகைய பேற்றை பெற்றவராவார்கள். அருட்பெருஞ்சோதியின் அசைவே நடனமாகும்.


சூரிய கலை, சந்திர கலை எதிரெதிர் நிலையில் உள்ள போது மாணிக்கத்துள்ளே மரகத மாடமாயும், இவ்விரு கலைகளும் இணையும் போது மாணிக்கத்துள்ளே மரகதச்சோதியாகவும் திகழ்கிறது.


சுத்தமான பொன்னம்பலமானது, மாணிக்கமும் மரகதமும் இணையும் இடமாகும். அருட்பெருஞ்சோதி உள்ள அம்பலமாகும்.


திருக்கூத்தின் பெருமையைக் கூறியவாறு.

ஓம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

22/03/2019 அன்று 'மஹான் காகபுஜண்டர்' அவதார திருநாளை முன்னிட்டு "ஸ்ரீ கருவூர் சித்தர் பீடம்" சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page